அறிவியல்




 நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்குமலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர்அறிஞனுக்காகநீரில் உள்ள மீன்கள் உட்பட,வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன.
ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்குமுன்னால்ஓர் அறிஞனின் சிறப்புநட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்மேலும்அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர்.
நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை.அவர்கள் வாரிசாக விட்டுச் சென்றதெல்லாம் அறிவையேயாகும்அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.'' (அபூதாவூத்அஹ்மத்)]

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அறிவை அறிவுக்காகத் தேடுவது பிழையானதாகும்அறிவும்,நம்பிக்கையும்செயலும் இணைந்து தொழிற்பட வேண்டும்செயலற்ற அறிவு பயனற்றது.
இஸ்லாமிய நோக்கில் அறிவானது கூறுபோடப்படுவதில்லைஇந்த வகையில் பயனுள்ள, ஆக்கப் பயிற்சிக்கு உதவும் அனைத்துக் கலைகளையும் இஸ்லாம் வரவேற்கத் தக்க அறிவாகக் கொள்கின்றது.இந்த அடிப்படையில் இறைவனது ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் இஸ்லாம்அறிவின் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்துகின்றது எனலாம்ஏனெனில்பயனுள்ள எல்லா வகையான அறிவினதும் மூலமாக இருப்பவன் அந்த ஏக இறைவனே.
இஸ்லாமிய நோக்கில் கல்வி என்பது பாடபோதனையுடன் மட்டுப்படத்தப்பட்ட ஒன்றல்லமாணவனது மூளையில் தகவல்களைத் திணிப்பது அதன் நோக்கமல்லஅது மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றுமல்ல.மாறாகஅது தனிமனிதனது ஆளுமையின் பரிபூரண வளர்ச்சிக்குத் துணை புரியக் கூடியதாக அமைய வேண்டும்.
அல்குர்ஆனில் இயற்கை விஞ்ஞானம்வானவியல்தாவரவியல்விலங்கியல்விவசாயம்,மானிடவியல்மனோதத்துவம்மருத்துவம்சமூகவியல்வரலாறுபுவியியல் போன்ற துறைகளுடன் தொடர்பான பல உண்மைகளும்அவற்றோடு தொடர்புடைய பல அடிப்படைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.]
இன்று நாம் காணும் அதிசயிக்கத்தக்க அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக தற்கால உலகை 'அறிவியல் யுகம்' என்று வர்ணிப்பர். கனணி (computer), மின்அஞ்சல் (e-mail), இணையம்(Internet)  டிஜிடல் தொழில்நுட்பம் என தகவல் தொழில் நுட்பத்துறை பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி உலகை ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாற்றியுள்ளது. உலகம் ஒரு பூகோளக் குடும்பமாக (Global Family) சுருங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என நம்பப்படுகின்றது. மறுபக்கத்தில் அறிவியல் ஆராய்ச்சியின் உச்ச நிலையில் போலாக்கம் (cloning) எனும் செயற்பாடு உலகை பெருவியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இத்தகைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் மத நம்பிக்கையானது கேள்விக் குறியாக்கப்பட்டு வருகின்றது. இது அறிவியல் யுகம்; மதத்துக்குரிய காலமல்ல் மதமானது அதன் பங்களிப்பை வரலாற்றில் செய்து முடித்து விட்டது; நவீன வாழ்க்கை அமைப்பில் அதற்கு இடமில்லை என்ற வாதம் முன் வைக்கப்படுகின்றது. இதற்கு பின்வருவன ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன.
1. அறிவியலின்றி ஒரு நாகரிகம் தோன்ற முடியாது. மதமோ அறிவியலுக்கு எதிரானதாகும். சம கால மேற்குலகின் அனைத்துத் துறை சார்ந்த முன்னேற்றத்திற்கும் அது மதத்தை நிராகரித்து அறிவியலை ஏற்று விசுவாசித்தமையே காரணமாகும்.

2. மனித வாழ்வு வரலாற்று நோக்கில் மூன்று கட்டங்களைக் கொண்டது.

1சமயம்

2. தத்துவம்

3. அறிவியல்
மூன்றாம் கட்டமே இறுதிக் கட்டமாகும்.

மதம் என்பது அபினைப் போன்றது. மனித சமூகம் அதிலிருந்து விடுபடாத வரை அதற்கு விடுதலை இல்லை; சுபீட்சம் இல்லை. அறிவும் அறிவியலும் இன்றி நாகரிகம் தோன்ற முடியாது என்பது ஒரு பேருண்மையாகும். ஆயினும் மதம் அறிவியலுக்கு முரணானது; அது அறிவியலை ஆட்சேபிக்கின்றது என்ற வாதம் பிழையானதாகும். மதம் அறிவியலுக்கு எதிரானது என்ற கருத்து ஐரோப்பிய வரலாற்றில் நடை பெற்ற சில நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்த ஐரோப்பிய நோக்காகும். மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையில் உலகில் வேறு எங்கும் போராட்டங்கள் நிகழவில்லை. அது ஐரோப்பாவிலேயே நிகழ்ந்தது.

மனித வரலாற்றில் மதம் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக எங்கும் அமைந்ததில்லை. ஐரோப்பாவில் தான் கிறிஸ்தவக் கோயில் அறிவு, ஆராய்ச்சிக்கும் சுதந்திரமான சிந்தனைக்கும் எதிராக வரலாற்றின் மத்திய காலப்பிரிவில் செயற்பட்டது.
ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அது அறிவு ஆராய்ச்சியை ஊக்குவித்த மார்க்கம் மட்டுமல்ல அறிவை அடிப்படையாகக் கொண்டு எழுந்த மார்க்கமாகும்.
அறிவு ஆராய்ச்சிக்கும் அறிவியல் அணுகுமுறைக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் அளித்தார்கள் என்பதற்கு அவர்களின் ஸீராவில் ஏராளமான சான்றாதாரங்கள் காணப்படுகின்றன.
'திட்டமிடல்' என்பது பிரதான அறிவியல் அணுகுமுறையாகும். அல்-குர்ஆன் நபி யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பதினைந்தாண்டு பொருளாதாரத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. அதற்கூடாக எவ்வாறு அன்று எகிப்தும் அதைச்சூழவுள்ள பிரதேசங்களும் பெரும் பஞ்சத்திலிருந்து காப்பாற்றப்பட்டன என்பதை சுட்டிக்காட்டுகின்றது. நபி (ஸல்) அவர்களும் தனது பிரச்சார வாழ்க்கையில் எவ்வாறு நுணுக்கமாக திட்டங்களைத் தீட்டிச் செயற்பட்டார்கள் என்பதனைக் காணமுடிகிறது. முதலாம் ஹிஜ்ரத், இரண்டாம் ஹிஜ்ரத், யுத்தங்கள் முதலானவை இதற்கு சிறந்த ஆதாரங்களாகும்.
'கணக்கெடுப்பு' என்பது மற்றுமோர் அணுகுமுறையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்குச் சென்று சில நாட்களிலேயே அங்குள்ள முஸ்லிம்களின் சனத்தொகையை கணக்கெடுக்குமாறு பணித்தார்கள். அவர்களின் தொகை அப்போது 1500 ஆக இருந்தது. (புஹாரி)
இன்னுமோர் அறிவியல் போக்கான 'பரிசோதனை' முறையையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்று அங்கீகரித்தார்கள். ஈத்த மர மகரந்த மணிச்சேர்க்கைச் சம்பவம் இதற்கு சிறந்த சான்றாகும். (முஸ்லிம்)
நம்பிக்கைகள், விழுமியங்கள், பெறுமானங்கள், சட்டதிட்டங்கள் முதலான வற்றுடன் தொடர்பற்ற உலகாயத, தொழில்நுட்ப விவகாரங்களில் அந்நியரின் உதவியை நாடுதல், ஆலோசனைகளைப் பெறுதல் பிழையானவையல்ல என்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது செயற்பாடுகள் மூலம் எடுத்துக்காட்டினார்கள். பாரசீகர்களின் வழிமுறையான யுத்தத்தின் போது அகழி வெட்டும் உத்தியை ஸல்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியபோது அதனை ஏற்று செயற்பட்டமை, அன்னார் குத்பா பிரசங்கம் செய்வதற்காக ஓர் உரோம தச்சன் ஒரு மின்பரை செய்து கொடுத்தமை முதலியன சில உதாரணங்களாகும்.

அறிவு பற்றி அல்குர்ஆன்
''பின்னர் அவற்றை (அல்லாஹ்) வானவர்கள் முன் வைத்து 'நீங்கள் கூறுவது உண்மையாயின் இவற்றின் பெயர்களை நீங்கள் தெரிவியுங்கள்' எனக் கூறினான். அவர்கள் (அதற்கு) 'நீ மிகத் தூய்மையானவன்; நீ எங்களுக்கு கற்பித்தவற்றைத் தவிர எதை பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை; நிச்சயமாக நீயே நன்கறிந்தவன்; தீர்க்கமான அறிவுடையவன்' எனக் கூறினார்கள்.'' (1:32)

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மலக்குகளை விட அறிவில் உயர்ந்தவர்களாக விளங்கிய காரணத்தினாலேயே அன்னாருக்கு 'ஸுஜூத்' செய்யுமாறு அல்லாஹ் அவர்களை பணித்தான். ஸூரத்துல் பகராவில் தொடர்ந்து வரும் வசனம் இவ்வுண்மையை விளக்குகின்றது: 
''மேலும் நாம் மலக்குகளிடம், 'ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள் எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர அவர்கள் (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள்...'' (1:34)நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 'உலுல் அஸ்ம்' என்றழைக்கப்படும் ஆறு பெரும் திட உறுதி பூண்ட இறைத்தூதர்களில் ஒருவராவார். அத்தகைய உயர் அந்தஸ்தைப் பெற்றிருந்த அவர்கள் அறிவு ஞானத்தைப் பெற்றிருந்த ஓர் இறையடியாரை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கண்டுபிடித்து பொறுமையுடன் அவரிடம் அறிவைப் பெற்ற கதையை அல்-குர்ஆனின் அல்-கஹ்ப் அத்தியாயம் குறிப்பிடுகின்றது.
அறிவின் முக்கியத்துவம் பற்றி நேரடியாகவே சொல்லும் அல்-குர்ஆன்

அறிவு எனும் பொருள்படும் 'இல்ம்' () என்ற பதம் அல்குர்ஆனில் என்பது இடங்களில் இடம் பெற்றுள்ளது. இப்பதத்தில் இருந்து பிறந்த சொற்களோ அல்குர்ஆனில் பல நூறு தடவைகள் வந்துள்ளன. அறிவு எனும் கருத்தைக் கொடுக்கும் அல்-அல்பாப் () எனும் சொல் அல்குர்ஆனில் பதினாறு முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பொருளைத் தரும் அந்நுஹா () என்ற சொல் இரு தடவைகள் வந்துள்ளன. அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள
பகுத்தறிவு என்ற பொருளைக் கொடுக்கின்ற அல்-அக்ல் ( ) என்ற வினையடியிலிருந்து பிறந்த சொற்களின் எண்ணிக்கை நாற்பத்தொன்பது ஆகும். சிந்தனை என்ற கருத்தில் பயன்படுத்தப்படும் அல்-பிக்ர் () என்ற சொல்லிலிருந்து பிறந்த பதினெட்டுச் சொற்களும் அதில் இடம்பெற்றுள்ளன் அல்-பிக்ஹ் () (விளக்கம்) என்ற பதத்திலிருந்து பிறந்த இருபத்தொரு சொற்களும் காணப்படுகின்றன. 'அல்ஹிக்மா' ஞானம் () என்ற பதம் இருபது தடவைகள் வந்துள்ளதுடன், ஆதாரம் என்னும் பொருள்படும் அல்-புர்ஹான் () என்ற சொல் ஏழு தடவைகளும் அல்-குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் 'ஆராய்தல்', 'நோக்குதல்', 'சிந்தித்தல்' போன்ற கருத்துக்களைத் தரும் பல சொற்களும் அல்-குர்ஆனில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.
இவை அனைத்துக்கும் மேலாக, முதன் முதலாக இறங்கிய அல்குர்ஆனின் வசனங்களே அறிவைப் பற்றியும் அறிவின் அடிப்படைகளாகத் திகழும் வாசிப்பு, எழுத்து, எழுதுகோல் பற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம்.

''(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.'' (96:5)
இவ்வசனங்களைத் தொடர்ந்து இறங்கிய வசனங்களும் அறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளன.
''நூன்'' எழுதுகோலின் மீதும் அதனைக் கொண்டு அவர்கள் எழுதுபவை மீதும் சத்தியமாக'' (68:1)
ஆராயுமாறும் சிந்திக்கும்படியும் மனிதர்களைத் தூண்டுகின்ற சுமார் 35 வசனங்கள் அல்குர்ஆனில் காணப்படுகின்றன. உதாரணத்திற்குக் கீழ்வரும் வசனத்தைப் படியுங்கள்.
''அவற்றின் கனிகளை நோக்குவீர்களாக. அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் உற்று நோக்குவீர்களாக. விசுவாசம் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன'' (6:99) கல்வியைத் தேடி உலகில் பயணம் செய்யுமாறு தூண்டும் சுமார் 50 வசனங்களை அல்குர்ஆனில் காண முடிகின்றது.
இத்தகைய வசனங்களுக்கு உதாரணமாகப் பின்வரும் வசனத்தைக் குறிப்பிடலாம்.

''(நபியே) நீர் கூறும், ''பூமியில் சுற்றித் திரிந்து (ஆரம்பத்தில்) சிருஷ்டிகளை எவ்வாறு படைத்தான் என்பதைப் பாருங்கள்'' (29:9)
அல்குர்ஆனில் பிரபஞ்சம் தொடர்பாகவும் அறிவியல் அத்தாட்சிகள் தொடர்பாகவும் பேசுகின்ற சுமார் 750 வசனங்கள் காணப்படுகின்றன.

அல்குர்ஆனில் இயற்கை விஞ்ஞானம், வானவியல், தாவரவியல், விலங்கியல், விவசாயம், மானிடவியல், மனோதத்துவம், மருத்துவம், சமூகவியல், வரலாறு, புவியியல் போன்ற துறைகளுடன் தொடர்பான பல உண்மைகளும், அவற்றோடு தொடர்புடைய பல அடிப்படைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அல்குர்ஆன் அறிவின் அவசியத்தை எந்தளவு வலியுறுத்துகின்றதெனில், அறிஞர்களே அல்லாஹ்வைச் சரியாகப் பயப்படுபவர்களாக இருப்பர் என்று கூறுகின்றது.
''அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் அறிஞர்களே.'' (35:28 மேலும், அல்குர்ஆன் அறியாமையையும் மடமையையும் நரகத்தின் பாதையென வர்ணிக்கின்றது.
''நிச்சயமாக மனிதர்களிலும் ஜின்களிலும் அதிகமானோரை நாம் நரகத்திற்காகவே படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன் எனினும், அவற்றைக் கொண்டு அவர்கள் உணரமாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன. எனினும், அவற்றைக் கொண்டு அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்குக் காதுகள் உண்டு. அவற்றைக் கொண்டு கேட்க மாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள். அன்றியும், அவற்றை விட வழிகெட்டவர்கள்'' (7:179)
இதுவரை நோக்கியவற்றிலிருந்து அல்குர்ஆன் அறிவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவும். இனி, ஸுன்னா அறிவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி கிழே நோக்குவோம்.

அறிவு பற்றி அல்-ஹதீஸ்

பெரும்பாலான ஹதீஸ் கிரந்தங்களில் 'கிதாபுல் இல்ம்' என்ற பெயரில் அறிவைப் பற்றிப் பேசும் ஹதீஸ்களைக் கொண்ட ஒரு தனியான அத்தியாயத்தைக் காண முடியும். அறிவுடன் தொடர்பான பல ஹதீஸ்கள் வேறு பல அத்தியாயங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணமாக 'கிதாபுத் திப்பி' (மருத்துவம் பற்றியது) என்ற அத்தியாயத்தைக் குறிப்பிடலாம். நூற்றுக்கணக்கான ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான ஸஹீஹுல் புஹாரியில் மாத்திரம் 'கிதாபுல் இல்ம்' என்ற அத்தியாயத்தில் 102 நபிமொழிகள் காணப்படுகின்றன. இனி, அறிவின் சிறப்பைக் கூறும் சில ஹதீஸ்களைக் பார்ப்போம்.

''ஒருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.'' (முஸ்லிம்)
''நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் வாரிசாக விட்டுச் சென்றதெல்லாம் அறிவையேயாகும். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.'' (அபூதாவூத்அஹ்மத்)
கட்டுரையின் தொடர்ச்சிக்கு ''Next'' ஐ ''கிளிக்'' செய்யுங்கள்.